கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை தன்னார்வ அமைப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்களை வேருடன் இடமாற்றம் செய்து மறுவாழ்வு அளித்து வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணியின் போது இவர்கள் மேற்கொள்ளும் இந்தச் சேவை அனைத்துத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஓசை அமைப்பின் இந்த மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவை தற்போது நாடு முழுவதும் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் திருச்சியில் மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, திருச்சி சென்ற ஓசை சையது தலைமையிலான குழுவினரை திருச்சி மாநகர மக்கள், பத்திரிகையாளர்கள், அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் அனைவரும் வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓசை அமைப்பின் இந்த மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவை தற்போது நாடு முழுவதும் சிறந்த மாற்றத்தினை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் திருச்சியில் மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, திருச்சி சென்ற ஓசை சையது தலைமையிலான குழுவினரை திருச்சி மாநகர மக்கள், பத்திரிகையாளர்கள், அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் அனைவரும் வரவேற்று பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.